For Daily Alerts
Just In
ஓரிரு மாதங்களில் குளச்சல் துறைமுகத்திற்கு அடிக்கல்: பொன்.ராதாகிருஷ்ணன்- வீடியோ
சென்னை: ஓரிரு மாதங்களில் குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜக இளைஞரணி மாநில செயற் குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கேரளா விடுத்த கோரிக்கையை பிரமதர் நிராகரித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
Comments
English summary
Union Minister of State for Shipping Pon. Radhakrishnan thanked Prime minister Modi for rejecting Kerala's request on Colachel harbour project.