நில ஆக்கிரமிப்பு... வீடுகளுக்கு சீல்... பள்ளி திரும்பிய குழந்தைகள் தெருவில் தவித்த சோகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜீவா நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 60 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட இடத்தைக் காலி செய்து மீண்டும் சுரேஷ் குமாரிடமே ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சீல் வைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். ஆறு வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், மற்ற வீட்டுக்காரர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க அவர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வீடுகளைக் காலி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications