90 நாட்களுக்கு ஒருமுறை டீசல் விலையை உயர்த்த வேண்டும்.. லாரி உரிமையாளர்கள் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்ன கேசவன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அடிக்கடி டீசல் விலை உயர்த்தப்படுவதால், தங்களால் லாரி வாடகையை உயர்த்த முடியவில்லை என்றும், எனவே, 90 நாட்களுக்கு ஒருமுறை டீசல் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்" எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications