கொலை மிரட்டல்: உள்ளிருப்பு போராட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தரமற்ற சிகிச்சையால் வாலிபர் இறந்தாக கூறி அவர்களின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கோரி டாக்டர்கள், செவிலியர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் சூரியூரை சேர்ந்தவர் சண்முகம் மகன் சரத்குமார், 27, கடந்த 8ம் தேதி கொட்டப்பட்டு சாலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த இவரது உறவினர்கள், சரத்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனின்றி சரத்குமார் இறந்துவிட்டார். இதனையடுத்து உறவினர்கள் சிகிச்சை அளித்த மருத்துவரை திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications