முழு அதிகாரம் கொண்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்: ஜி.கே.மணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பாமக வேட்பாளர் பாஸ்கர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் வந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கடந்த முறை அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில், பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் அதற்கான காரணத்தைச் சரி செய்யாமலேயே மீண்டும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு, தன்னாட்சி கொண்ட முழு அதிகாரம் கிடைக்கும் வகையில், நடப்பு லோக்சபா கூட்டத்தில் சட்டம் திருத்தம் கொண்டு வரவேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications