பாசமே பாசக் கயிறானது.. மருத்துவர்களை தாய் யானை விரட்டியதால் குட்டியானை சாவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், ஹாசனூர் வனசரகம், மாரிக்குடி வனப்பகுதியில் குட்டியானை ஒன்று எழ முடியாமல் உயிருக்கு போராடி வந்த தகவல் கிடைத்த வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, தாய் யானை மற்றும் மேலும் சில யானைகள் அந்த குட்டி யானையை சூழ்ந்து நின்று பாதுகாத்துக்கொண்டிருந்தன. குட்டியானைக்கு மருத்துவ சிகிச்சையளிக்க வனத்துறை மருத்துவர்கள் நெருங்கியபோது, பிற யானைகள் அவர்களை விரட்டியடித்தன.
இதையடுத்து ஒருநாள் கழித்து இன்று, வன அலுவலர்கள் மீண்டும் சென்று பார்த்தபோது அந்த 5 வயது மதிக்கத்தக்க குட்டியானை இறந்துவிட்டது தெரிய வந்தது.
வீடியோ












Click it and Unblock the Notifications