For Daily Alerts
Just In
சர்வதேச செம்மரக் கடத்தல் கும்பல் கைது.. கார், லாரி பறிமுதல்
திருப்பதி: சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரும் அவருடைய கூட்டாளிகளும் தொடர்ந்து 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருந்து சீனாவிற்கு செம்மரங்களை கடத்தி வந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த சுப்ரா என்ற சுப்ரமணியன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு இந்த செயலை செய்து வந்துள்ளார். ஆந்திர மாநிலம் கம்பாலி சோதனைச் சாவடி அருகில் வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் செம்மரங்களை கடத்தும் கும்பல் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3.5 டன் எடை கொண்ட 5 கோடி மதிப்பிலான செம்மரங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும், சுப்ரமணியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த கார், லாரி மற்றும் ரொக்கப்பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
English summary
International red sanders smuggling gang has been arrested in Andra Pradesh by police.
Story first published: Saturday, November 12, 2016, 16:42 [IST]