For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜல்லிக்கட்டை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன... பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை- வீடியோ
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதித்து அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால் வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டுகள் நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையினர் திருச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
Comments
English summary
Union Minister of State for Road Transport, Highways and Shipping Pon. Radhakrishnan expressed confidence that “jallikattu” will be held in Tamil Nadu during Pongal next year.
Story first published: Sunday, November 20, 2016, 18:15 [IST]