ஜெ. படத்திற்கு பால் ஊற்றி... கரூரில் 40 பேர் மொட்டையடித்தும், பூமுடி கொடுத்தும் அஞ்சலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு காலமானார். அவரது உடல் 6ம் தேதி எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவை ஒட்டி தமிழகத்தில் ஏழு நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினார். அந்தவகையில், கரூர் நகராட்சியின் 24 வார்டு பொதுமக்கள் ஜெயலலிதாவின் படத்திற்கு பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஆண்கள் 25 பேர் மொட்டை அடித்தும், பெண்கள் 15 பேர் பூமுடி கொடுத்தும் தங்களது இரங்கலை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications