கரூர் தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டிய முகமூடி கும்பல் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: தொழிலதிபரின் காவலாளிகளை கடத்தி வைத்து ரூ.50 கோடி கேட்ட முகமூடி கும்பல் கைது செய்யப்பட்டது. வீரவாக்கியம் பகுதியில் வசிக்கும் சாமியப்பன் என்ற தொழிலதிபர் வீட்டிற்கு கடந்த செவ்வாய் நள்ளிரவு வேனில் சென்ற முகமூடி கும்பல் அவர் வீட்டு காவலாளிகள் மூவரை தாக்கி தங்கள் வேனுக்குள் இழுத்து போட்டது.
வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, சாமியப்பன் தனது பால் பண்ணையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு போனில் தகவல் கொடுக்க 50க்கும் மேற்பட்டோர் ஓடிவந்ததால் கொள்ளை கும்பல் தப்பியோடியது. இதனிடையே சாமியப்பனை போனில் தொடர்பு கொண்ட கொள்ளை கும்பல் ரூ.50 கோடி கொடுத்தால் காவலாளிகளை விடுதலை செய்வதாக பேரம் பேசியது. போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வேடச்சத்தூர் அருகே கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டது. அந்த வீடியோவை பாருங்கள்.












Click it and Unblock the Notifications