குரங்கை சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற மருத்துவ மாணவர்கள்... 4 பேர் சஸ்பெண்ட்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நான்கு மாணவர்கள், தங்களது விடுதி வளாகத்தில் கடந்த சனிக்கிழமையன்று சிறு பெண் குரங்கு ஒன்றை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த குரங்கின் உடலை எரித்த மாணவர்கள், அதனை விடுதியின் பின்புறம் புதைத்துள்ளனர். சக மாணவர்கள் முன்பு நடந்த இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள் மூலம் போலீசுக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு மாணவர்களையும் இடைநீக்கம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications