காவிரி விவகாரம்... தனித்தனி அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் தேவையில்லை: முத்தரசன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சேலத்தில் மக்கள் நல கூட்டணி சார்பில் கடந்த 18ம்தேதி ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய மாநகர போலீசை கண்டித்தும், மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 13 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "காவிரி பிரச்னை தொடர்பாக திமுக தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் வரவேற்கத்தக்க நல்ல தீர்மானங்கள். அதே சமயம் இது தொடர்பாக தனித்தனி அனைத்துக்கட்சிக் கூட்டங்கள் நடத்தினால் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications