ஆவின் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்... சட்டசபையில் ஜெ. அறிவிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார். அதில் அவர், "தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஓய்வு பெற்ற பணியாளர், வருங்கால ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் தற்போது பெற்று வரும் ஓய்வூதிய தொகையுடன், கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,500 பெறும் வகையில், புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், ஓய்வூதிய தொகையில் 50 சதவீத தொகை குடும்ப ஓய்வூதியமாக அனுமதிக்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.27 கோடி செலவு ஏற்படும்" என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications