மழை வேண்டி நடந்த ‘வினோத’ திருமணம்... பேனர்ஸ், விருந்து என அமர்க்களப் படுத்திய மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தென்மேற்குப் பருவமழை காலத்தில் எதிர்பார்த்த மழை கிடைக்காததால் விவசாயத்தை நம்பியுள்ள பல்வேறு கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மழை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்தத் திருமணத்தையொட்டி வாழ்த்து பேனர்கள் மற்றும் தடபுடலான விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு, மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications