நீண்ட க்யூ... கால் கடுக்க நிற்கும் வயதானவர்கள்.. வங்கிகளில் அலைமோதும் கூட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்களிடம் உள்ள பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மாற்ற தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளின் வாசல்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. பல இடங்களில் இன்னும் புதிய நோட்டுகள் வராததால், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் சில இடங்களில் எதிர்பார்த்ததை விட குறைவான அளவே மக்களுக்கு பணம் கிடைத்தது. வங்கிகளின் வாசல்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால், கொஞ்சம் கொஞ்சமாகவே மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் வரிசையில் காத்திருந்த வயதானவர்கள் வெயிலால் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.












Click it and Unblock the Notifications