மல்லிகைப்பூ மழை... 6 அடி பேனா... குரு பாக்யராஜை அசர வைத்த சிஷ்யன் பார்த்திபன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
இயக்குநர் பாக்யராஜிடன் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் பார்த்திபன். இவர் தற்போது பாக்யராஜ் மகன் சாந்தனுவை நாயகனாக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தனது குரு பாக்யராஜுக்கு மரியாதை செய்யும் விதமாக நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்து பார்த்திபன் அசத்தி விட்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மேடையில் குரு பாக்யராஜை அமர வைத்த பார்த்திபன் அவர் மீது மல்லிகைப்பூ மழை பொழிய வைத்தார். பின்னர் அவரது சிஷ்யர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் ஆறடி நீளமுள்ள பேனா ஒன்றை பாக்யராஜுக்கு அளித்தனர்.












Click it and Unblock the Notifications