மணல் கடத்தல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. லாரி உரிமையாளர்கள் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு மணல் கடத்திய 54 லாரிகளின் உரிமையை ரத்து செய்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் அப்போது பேசிய செல்வராஜ், "சேலம் மாவட்டம் வழியாக மணல் கடத்துபவர்களை அதிகாரிகள் தடுக்காவிட்டால், மணல் லாரி உரிமையாளர்கள் குழு அமைத்து, கடத்தல்காரர்களை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைப்போம்' என்றார்.












Click it and Unblock the Notifications