12ம் தேதி கலவரம் வருத்தம் அளிக்கிறது: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: காவிரி போராட்டத்தினால் பதற்றம் நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன் ஒரு கட்டமாக அவர் தமிழக - கர்நாடக எல்லைகளையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பரமேஸ்வர், 'கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற கலவரம் கவலை அளிப்பதாக' கூறினார். மேலும் கர்நாடகா முழுவதிலும் மட்டுமின்றி எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications