திருப்பூரில் பிடிபட்ட மதனுக்கு 7 நாள் போலீஸ் காவல்.. கோர்ட் உத்தரவு- வீடியோ
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் மதன், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மாணவர்கள் பலரிடம் பணம் பெற்றதாக புகாரில் சிக்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் திடீரென தலைமறைவானார் மதன். தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான அவரை, போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மதனின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் தேடுதலின் முடிவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பூரில் கைதானார் மதன். சைதாப்பேட்டை 11 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மதனிடம் விசாரிக்க 10 நாள்கள் அனுமதி வழங்கக் கோரி சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதித்துறை நடுவர் பிரகாஷ், மதனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications