மது குடித்து விட்டு பள்ளி வகுப்பறையில் கும்மாளம்... திருப்பூரில் 8 மாணவர்கள் சஸ்பெண்ட்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் ராயபுரம் பகுதியில் இயங்கி வரும் நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவர்கள் 8 பேர் மது அருந்தி விட்டு வந்தது தலைமையாசிரியருக்குத் தெரிய வந்தது. போதையில் இருந்த மாணவர்கள் வகுப்பறையில் வாந்தி எடுத்து அசுத்தம் செய்ததோடு, கூச்சலிட்டும் பள்ளி வளாகத்தில் பட்டாசு வெடித்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகனுக்கு தகவல் தெரிவித்தார் அப்பள்ளியின் ஆசிரியர். அதனைத் தொடர்ந்து, உரிய விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த 5 மாணவர்களும் 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications