கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி.. தொடர் போராட்டம் நடத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் முடிவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பெட்ரோலியப் பொருட்கள் விற்பனைக் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திருச்சியில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தினரின் மண்டலக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க மாநிலத் தலைவர் முரளி, "கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன் முதல்கட்டமாக பெட்ரோல் பங்குகளில் விளக்குகளை அணைக்கும் போராட்டமும், அதனைத் தொடர்ந்து கொள்முதல் நிறுத்தப் போராட்டமும் செய்ய இருக்கிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications