மழை பொய்த்தது... விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சர்க்கரை ஆலைகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் விருத்தகிரி தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. எனவே, அனைத்து விவசாயக் கடன்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications