ஸ்டார் ஹோட்டலில் ‘சூப்’ செய்வதற்காக கடத்தப்பட்ட 31 ஆமைகள்... ரயிலில் நடந்த சோதனையில் மீட்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தப்பட இருந்த 31 ஆமைகளை விழுப்புரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மீட்டுள்ளனர். போலீசார் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் ஆமைகள் இருந்த மூட்டையை ரயிலிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கடத்தப்பட்ட ஆமைகள் சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் சூப் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட ஆமைகள் மீண்டும் வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விடப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications