For Daily Alerts
Just In
வங்கி அதிகாரி போல் நடித்து நூதன முறையில் ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளை- வீடியோ
விழுப்புரம்: வங்கி அதிகாரி போல் போனில் பேசி விழுப்புரத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை மர்மநபர் ஒருவர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியமொழி. இவரது வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் இருந்துள்ளது. இந்நிலையில், இவரது செல்போனைத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, இலக்கிய மொழியின் வங்கி எண், ரகசிய பின் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது வங்கியில் இருந்த மொத்தப்பணமும் திருடு போயுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இலக்கியமொழி நூதன முறையில் பணம் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
வீடியோ:
Comments
villupuram woman bank officer cheating case oneindia tamil videos விழுப்புரம் பெண் வங்கி அதிகாரி பணம் கொள்ளை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Villupuram a woman was cheated by some unknown person who acted as a bank officer.
Story first published: Sunday, October 16, 2016, 17:37 [IST]