கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்து 3 பேர் பலி! விழுப்புரத்தில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்து 3 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அருங்குறிக்கை என்ற கிராமத்தில் 100 அடி கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தன. இதற்காக பொக்லைன் இயந்திரத்தில் கயிறு கட்டி தணிகாசலம் (48), ஹரி கிருஷ்ணன் (40), முருகன் (38) ஆகிய 3 பேர் இறங்கியுள்ளனர்.

villupuram crime

அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த ரோப் அறுந்தது. இதில் அந்த 3 பேரும் கிணற்றில் விழுந்தனர். அப்போது அவர்களுக்கு கை,கால்களில் முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவர்கள் மூவரும் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கிணற்றின் உரிமையாளர், பொக்லைன் இயந்திரத்தை இயக்கியவர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். கிணறு வெட்டும் போது 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+