விழுப்புரம் முள்தோப்பில் மறைந்திருந்த அந்த எமன்.. அலறல் கேட்டு ஓடிவந்த மக்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் அரங்கேறிய அந்த பயங்கர சம்பவம் ஒரு அழகான குடும்பத்தின் நிம்மதியை அடியோடு குலைத்து ரத்தக் களரியாக மாறியுள்ளது.. சந்தேகப் பேயால் கணவன் கையில் எடுத்த கத்தி, 3 குழந்தைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி ஊரையே உறைய வைத்துள்ளது.. அப்படி என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சின்னசெவலை என்ற கிராமம்.. இந்த கிராமத்தைச் சேர்ந்த கலியபிள்ளையின் மகன் கோவிந்தன். இவருக்கு 42 வயதாகிறது..

விழுப்புரம் ரேணுகா
விழுப்புரத்திலேயே டிரைவராக வேலை பார்த்த வந்தார்.. இவரது மனைவி பெயர் ரேணுகா.. 36 வயதாகிறது.. இவர்களுக்கு திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை இனிதே நகர்ந்து கொண்டிருந்தது.. இந்த தம்பதிக்கு 3 மகன்களும் உள்ளனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாகவே கோவிந்தனின் மனதில், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் வேர்விட ஆரம்பித்தது.. இந்த சந்தேகத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அது குடும்பத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த மோதல் ஒருகட்டத்தில் முற்ற துவங்கியது.
சந்தேக புயல்
இதனால் கணவருடன் தொடர்ந்து வாழ விருப்பமில்லாத ரேணுகா, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார்.. பிறகு கணவரைப் பிரிந்து, அதே கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கும் சென்று அங்கு வசித்து வந்தார்.. மனைவியின் இந்த முடிவு கோவிந்தனின் ஆத்திரத்தை இன்னும் அதிகரித்தது..
பிரிந்து சென்ற போதிலும், ரேணுகா மீதான வன்மம் கோவிந்தனின் மனதில் எரிமலையாய் குமுறிக்கொண்டே இருந்தது.. அந்த வன்மம் ஒரு கட்டத்தில் விபரீத முடிவை நோக்கி நகர்ந்தது..
முள்தோப்பில் மறைந்திருந்த எமன்
நேற்றிரவு 9 மணி அளவில், ரேணுகா தனது வீட்டின் அருகே உள்ள முள்தோப்பிற்குத் தனியாக சென்றுள்ளார்.. இதுதான் சமயம் என்று காத்திருந்த கோவிந்தன், இருட்டில் மறைந்திருந்து மின்னல் வேகத்தில் ரேணுகாவை வழிமறித்தார்.. கையில் வைத்திருந்த கத்தியால் எதையும் யோசிக்காமல் ரேணுகாவின் தலையில் சரமாரியாக வெட்டினார்.
கணவரின் வெறியாட்டத்தில் பலத்த காயமடைந்த ரேணுகா, நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.. வலியால் அவரது மரண அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.. மக்கள் திரண்டு வருவதைகண்ட கோவிந்தன், அங்கிருந்து எகிறி குதித்து தப்பியோடி இருட்டில் மறைந்தார்.
அரசு மருத்துவமனை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரேணுகாவை மீட்டு உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரேணுகா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.. இதையடுத்து அவரது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பயங்கரக் கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர வேட்டையில் இறங்கினர்.
இறுதியில் அதே பகுதியில் பதுங்கியிருந்த கோவிந்தனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. இந்தத் துயர சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. சந்தேகப் பேயால் 3 பிள்ளைகளின் எதிர்காலமே இப்போது கேள்விக்குறியாகி நிற்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications