விழுப்புரத்தில் கிமு 3-ம் நூற்றாண்டு தமிழர்களின் முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள் கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கிமு 3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், மண்குடுவைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை லோக்சபா எம்.பி. ரவிக்குமார் நேரில் பார்வையிட்டார்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை கொடுக்கூர் என்ற கிராமத்தில் செங்கல் சூளைக்காக பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பழமையான முதுமக்கள் தாழிகள், மருந்துக் குடுவைகள், எலும்புகள், பானை ஓடுகள், கீழடியில் கிடைக்கப்பெற்ற பெரிய செங்கற்கள் போன்றவை கிடைத்துள்ளன.

தொல்லியல் துறை ஆய்வு
பழமையான பொருட்கள் கிடைத்ததை அடுத்து இப்பகுதி மக்கள் தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் தலைமையிலான குழு விரைந்து வந்து கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கைப்பற்றி தொல்லியல் துறை வசமாக்கியது.

ரவிக்குமார் ஆய்வு
மேலும் விழுப்புரம் எம் பி ரவிக்குமாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தொல்லியல் பொருட்களை எம் பி ரவிக்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

கீழடி போல செங்கற்கள்
அப்போது ரவிக்குமார் கூறியதாவது: கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கப் பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்க கூடும். கீழடியில் கிடைக்கப்பெற்றதை போல் பெரிய செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அகழாய்வு நடவடிக்கை தேவை
இதனால் இப்பகுதியிலும் அகழாய்வு நடத்த வேண்டும். இந்த தொல்லியல் பொருட்கள் தொடர்பாக தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார் என்றார் ரவிக்குமார். விழுப்புரம் பகுதியில் மேட்டுப்பாளையம், பூவரசன்குப்பம் பகுதிகளிலும் இதேபோல் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications