அமைச்சரென்று கூட ஒரு மரியாதை இல்லையே! திண்டிவனம் திமுக நிர்வாகிகளால் திகைத்துப் போன செஞ்சி மஸ்தான்!
விழுப்புரம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையிலேயே திண்டிவனம் திமுக நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனது முன்னிலையிலேயே இப்படி சண்டை போட்டால் அமைச்சர் என்று நான் எதற்கு எனக் கேட்காத குறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை கண்டு திகைத்துப் போய் நின்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். அப்போது திண்டிவனம் முன்னாள் திமுக நகரச் செயலாளர் கபிலன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்போதைய நகரச் செயலாளர் தங்களை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுப்பதில்லை என்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பெயர் போடுவதில்லை எனவும் வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு உரிய விளக்கத்தை திண்டிவனம் திமுக நகரச் செயலாளர் கொடுத்தும் அதை ஏற்காத கபிலன் தரப்பு, அமைச்சர் முன்னிலையிலேயே பெருங்குரலெடுத்து கத்தி ஆர்ப்பாட்டம் போட்டது. உட்கார்ந்து பேசுங்க, உட்கார்ந்து பேசுங்க என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை அமைதிப்படுத்தியும் அங்கே வாக்குவாதம் தொடர்ந்தது.
இது போன்ற நிகழ்வுகள் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையிலோ, எ.வ.வேலு முன்னிலையிலோ நடந்திருந்தால் பிரச்சனை செய்த நபரை அன்றைய தினமே கட்சியிலிருந்து கட்டம் கட்ட நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து வாக்குவாதம் செய்தவர்களை சமாதானம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
கட்சிக் கூட்டங்களுக்கு ப்ளக்ஸ் பேனர்களோ, சுவரொட்டிகளோ வேண்டாம் கட்சிக்கொடி கட்டினால் மட்டும் போதும் என திமுக தலைமை கேட்டுக்கொண்டதற்கு காரணமே இது போன்ற பெயர் போடவில்லை என்ற பிரச்சனையும், படம் போடவில்லை என்ற சர்ச்சையும் எழும் என்பதேயாகும்.












Click it and Unblock the Notifications