Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“உல்டா” ஆகப்போது.. மதவாத சக்திகள் கையில் “அதிமுக”! பாஜகவால் ஆபத்து - எச்சரிக்கும் மாஜி எம்பி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அதிமுக உட்கட்சி பிளவு காரணமாக பாஜக தலைமை ஏற்று அதிமுகவுக்கு ஒரு சில சீட்டுகள் வழங்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், ஓபிஎஸ் இபிஎஸ் பிளவு திமுகவுக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு இருப்பதாகவும் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதா வழிநடத்தியபடி அதிமுகவை உருவாக்க வாருங்கள் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிச்சாமி, "அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிளவினால் அதிமுக தொண்டர்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர்.

 மதவாத சக்திகள்

மதவாத சக்திகள்

அதிமுக உட்கட்சி பிளவின் காரணமாக மதவாத சக்திகளின் கையில் தற்பொழுது அதிமுக உள்ளது. வரும் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமைப் பொறுப்பு ஏற்று பின்னர் கூட்டணி கட்சியில் அதிமுகவுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே வழங்கும் நிலைமை ஏற்படும். தற்பொழுது இபிஎஸ் ஓபிஎஸ் ஒற்றைத் தலைமைக்காக போட்டி போட்டுக் கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

 முறையான பொதுக்குழு

முறையான பொதுக்குழு

இதனை தடுக்கும் விதத்தில் எம்ஜிஆர் வழியில் லஞ்ச லாபம் இல்லாத உண்மையான ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் முறையாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும். தொடர்ந்து இபிஎஸ் பொதுச் செயலாளராகவும் ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றனர்.

சாதிய பார்வை

சாதிய பார்வை

இந்த நிலையில் வழக்குகள், குற்றங்களிலிருந்து தப்பிக்கவே இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என யாராக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் தொண்டர்கள் வழியில் தொண்டர்கள் செல்வாக்கைப் பெற்று பொதுச் செயலாளராக ஆகலாம். அதிமுகவில் ஓபிஎஸும் இபிஎஸும் ஜாதிய பார்வையுடன் ஊழல் செய்யும் நபர்களுக்கு சீட்டு வழங்குகின்றனர்.

சசிகலாவுக்கு தகுதியில்லை

சசிகலாவுக்கு தகுதியில்லை

ஓபிஎஸ் இபிஎஸ் பிளவுபட்டதால் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுக கட்சிக்கும் சாதகமாக அமைய சூழல் உருவாகியுள்ளது. இதனை தடுக்க வேண்டும். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் மூலம் உருவாக்கப்பட்ட அதிமுகவின் சின்னமும், கொடியும் முடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக சசிகலாவுக்கு தகுதி இல்லை. உண்மை தொண்டர்கள் அதை ஏற்க மாட்டார்கள்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+