நீட் தேர்வு முடிவுகள்: 720-க்கு 720 மதிப்பெண்களை பெற்ற விழுப்புரம் மாணவர்! குவியும் பாராட்டுகள்
விழுப்புரம்: நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண்களை பெற்று விழுப்புரம் மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நீட் தேர்வு, கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதினர்.

கடந்த மே 30 ஆம் தேதி நீட் தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியானது. இதையடுத்து ஜூன் 14 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் 13,16,268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் தமிழகத்தில் நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஜெயந்தி பூர்வஜா, ரோகித், ராஜனீஷ், சபரீசன் ஆகிய 4 பேரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
720-க்கு 720 மதிப்பெண்களை பெற்ற ரஜ்னீஷ், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த ரயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலா தேவி தம்பதியின் மகன் ரஜ்னீஷ். நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்களை பெற்ற இவர் சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார்.
இவர் பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண்களையும் பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண்களையும் பெற்றிருந்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி எடுத்து முழு மதிப்பெண்களை ரஜ்னீஷ் பெற்றுள்ளார்.
இவர் டெல்லி எய்ம்ஸில் பயின்று இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆசை. இதற்காக அதிக பயிற்சி மேற்கொண்டதில் அதிக பலன் கிடைத்துள்ளது. தேர்வுகள் அதிகம் எழுதிக் கொண்டிருந்தாலே அதிக மதிப்பெண்களை எடுக்கலாம் என ரஜ்னீஷ் தெரிவித்தார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications