பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? நம்ப முடியலை.. வரட்டும் பார்க்கலாம்- சிபிஎம் பாலகிருஷ்ணன்
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்வதை நம்ப முடியாது என்கிறார் சிபிஎம் பாலகிருஷ்ணன்.
விருதுநகர்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பை நம்ப முடியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது: அதானி குழுமங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் சிறு, குறு தொழில்களை நசுக்க பார்க்கின்றனர். பிபிசி ஊடக நிறுவனத்தில் வருமான வரி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத் மதமோதலில் பிரதமர் மோடிக்கு தொடர்பிருப்பதாக ஆவணப்படம் வெளியிட்ட காரணத்தால் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டை முன்வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவில் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார். அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதி செய்ததால் நிலக்கரி மீதான இறக்குமதி வரியை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதனை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் பிரதமர் மோடி பதில் தர மறுக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது. இதனால்தான் தமிழ்நாட்டு பாஜகவினருக்கு ஆளுநர் பதவிகள் தரப்படுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடைசிநேரத்தில் மோசடிகளை அரங்கேற்ற அதிமுக-பாஜக கூட்டணி முயற்சிக்கிறது. இதனை தடுக்க வேண்டும். இடைத்தேர்தல் களத்தில் பெரும் எண்ணிக்கையில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் குவிக்கப்படுவதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என விரும்புகிறோம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிரோடு இருக்கிறார் என்பதை நம்ப முடியாது. நெடுமாறனின் பிரபாகரன் குறித்த அறிவிப்பு ஏற்புடையது அல்ல. அப்படியே பிரபாகரன் உயிருடன் வந்தால் அவர் வரும் போது பேசலாம். இத்தகைய அறிவிப்புகள் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications