விருதுநகர் அருகே தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்.. பதறி அடித்து இறங்கிய பயணிகள்! ஹைவேயில் திக் திக்
விருதுநகர்: நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் நடு வழியில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து வெளியேறினர். இதனால் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் என்.ஜினில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.
உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். தொடர்ந்து பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேறினார். சற்று நேரத்தில் பஸ் முழுக்க தீப்பிடிக்க ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் பஸ் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பஸ்சில் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஸ்சில் இருந்த சில பயணிகளின் உடைமைகள் தீயில் கருகி நாசமாகின. விபத்து குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications