Koomapatty Thangpandi: கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு.. பஸ் பயணத்தில் சோகம்.. மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமத்தை தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரபலமாக்கிய தங்கபாண்டி (Koomaptty Thangapandi)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தனியார் தொலைக்காட்சியின் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு பஸ்சில் ஊர் திரும்பினார். கீழே இறங்கும்போது திடீரென்று பிரேக் போட்டதால் அவரது தோள்பட்டையில் பஸ்சின் கதவு இடித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கூமாபட்டி.. சமீபத்தில் திடீரென்று இணையதளங்களில் டிரெண்டானது. இந்த கூமாபட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்புக்கு அடுத்து அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கூமாபட்டி கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தை பிரபலமாக்கியவர் தங்கபாண்டி. dark_ night_ tn84 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் அவர் தனது கிராமம் குறித்த வீடியோவை பதிவிட்டு ‛ஏங்க கூமாபட்டிக்கு வாங்க..' என சொல்லி சொல்லி ஊரை பிரபலமாக்கினார்.
தற்போது தங்கபாண்டியன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை முடித்து கொண்டு தங்கபாண்டி பஸ்சில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் சென்றது.
அப்போது திடீரென்று பிரேக் போடப்பட்டது. தங்கபாண்டி அதனை எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் பஸ்சின் முன்புறம் போய் கதவில் மோதினார். அவரது தோள்பட்டையில் கதவு பலமாக இடித்தது. இதில் தங்கபாண்டியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தங்கப்பாண்டி கூறுகையில், ‛‛நான் சென்னை கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பஸ்சில் வந்திருந்தேன். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாப் வந்தது. பாத்ரூம் போக வேண்டும் என்று கூறி பஸ்சில் இறங்க முயன்றேன். அப்போது திடீரென்று டிரைவர் பிரேக் போட்டார். இறங்க சென்றவன் பஸ்சில் கீழே விழுந்துவிட்டேன். கதவை திறக்க கூறியபோது அது ‛லாக்' ஆகிவிட்டது. கை வலியில் திறக்க கூறினேன். ஒன்றும் செய்ய முடியவில்லை. வலி, வேதனை தாங்க முடியவில்லை. கம்பியை கொண்டு அடித்து கதவை திறந்து விட்டார்கள்.
ஏங்க இவ்வளவு வேகமாக பிரேக் போட்டீர்கள் என்று டிரைவரிடம் கேட்டேன். அதற்கு அவர் பார்க்கிறது வடக்கன் மாதிரி இருக்கிறேன் என்று தவறாக பசினார். நான் வலி, வேதனையில் துடித்து கொண்டிருக்க பஸ்சின் முன்பு வந்துவிட்டார்கள். நான் பிரேக் போட்டேன். நான் என்ன செய்ய என்று டிரைவர் பேசியது தான் கஷ்டமாக போச்சு. புகார் கொடுத்துள்ளேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications