ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!
விருதுநகர்: சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரு தொகுதிகளிலும் ராஜேந்திர பாலாஜி செய்திருக்கும் அரசியல் அவரது ஆதரவாளர்களை உற்சாகமாக்கி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்யை ராஜேந்திர பாலாஜி அடித்துவிட்டதாக பெருமிதம் பேச தொடங்கி இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கிய பவர் சென்டராக இருந்து வருகிறார். இவரை மீறி விருதுநகர், தென்காசி மாவட்டத்தில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறார். இதன் காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் மோதல் ஏற்பட்டது.

தற்போது கெளதமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, ராஜபாளையம் தொகுதியையும் ஜான் பாண்டியன் பக்கம் திருப்பிவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாகவே நடிகை கெளதமி பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
இதனை அறிந்து கொண்டே ராஜபாளையம் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு கொடுக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ராஜேந்திர பாலாஜி ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துள்ளார். ஏனென்றால் சாத்தூர் தொகுதி பாஜக பக்கம் சென்றதிலும் ராஜேந்திர பாலாஜியின் அரசியல் உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சாத்தூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் போட்டியிட பணிகளை மேற்கொண்டு வந்தார். அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்தை கூட ஒருங்கிணைத்தது ராஜவர்மன் தான். மீண்டும் சாத்தூர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியிடமும் ராஜவர்மன் பேசி இருந்தார்.
ஆனால் சாத்தூர் எம்எல்ஏ-வாக ராஜவர்மன் இருந்த போது, அவருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் ராஜேந்திர பாலாஜி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி பாஜக பக்கம் தாவினார். இதனால் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதிக்கு மாறுவதால், ராஜபாளையம் தொகுதி நமக்கு வரும் என்று கோபால்சாமி நம்பினார்.
ஆனால் சாத்தூர் தொகுதியை பாஜக பக்கமும், ராஜபாளையத்தை ஜான் பாண்டியனுக்கும் ஒதுக்கி ராஜேந்திர பாலாஜி ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்திருக்கிறார். அதேபோல் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் பவர் சென்டராகவும் ராஜேந்திர பாலாஜி மீண்டும் உருவாகி இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கையாக பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
-
“எடப்பாடி உடன் சேர்த்து வைத்தது பாஜக தான்.. எல்லாம் அமித் ஷா முயற்சியால் நடந்தது” - டிடிவி தினகரன் -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி! -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
அதிமுக 167 வேட்பாளர்கள்.. எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை? - முழு விவரம் இதோ! -
தேமுதிகவில் விலகிய கையோடு.. அதிமுகவில் இணைந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.. என்ன நடந்தது? -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
திடீரென எகிறிய கிரேஸ்.. வன்னியர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அதிமுக? லிஸ்டை கவனிச்சீங்களா? -
வேலூர் தொழில் அதிபர்களால் ட்விஸ்ட்.. ஜோலார்பேட்டையில் கேசி வீரமணிக்கு கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது -
எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்!












Click it and Unblock the Notifications