சிவகாசியில் இன்று மத்திய சுழற்சங்கம் நிகழ்ச்சி.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு
விருதுநகா்: சிவகாசி மத்திய சுழற்சங்கம் சாா்பில் நடைபெற உள்ள தொழிலதிபர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்ற இன்று சிவகாசி வருகிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
தேசிய அளிவல் பட்டாசு உற்பத்தியில் சிவகாசிக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. இருப்பினும் சமீப காலமாக சீன பட்டாசுகள் இறக்குமதியால் சிவகாசி பட்டாசின் மவுசு குறைந்துபோது. பின்னர் மத்திய அரசு இதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல பட்டாசுகளை பயன்படுத்துவதில் சுற்று சூழல் அமைப்புகள் விதிக்கும் கட்டுப்பாடுகள், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் காரணமாக பட்டாசு தொழில் நலிந்துக்கொண்டே வருகிறது.

இதனை மீட்டெடுக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவ்வப்போது சிவகாசிக்கு வருகை தந்து இந்த பிரச்னை குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக சிவகாசி மத்திய சுழற்சங்கம் சாா்பில் நடைபெற உள்ள தொழிலதிபா்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்ற இன்று தமிழிசை சௌந்தரராஜன் சிவகாசிக்கு வருகிறார்.
இந்த நிகழ்ச்சி சிவகாசி-திருத்தங்கல் சாலையில் உள்ள பெல் உணவகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்படுகள் இந்த சங்கத்தின் சங்கச் செயலா் ஜி. தட்சிணாமூா்த்தி தலைமையில் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications