ரயில் படியில் அமர்வதில் தகராறு.. சண்டை முற்றி கீழே விழுந்த 2 பேர் பலி.. விருதுநகர் அருகே பயங்கரம்!
விருதுநகர்: நாகர்கோவில் - கோவை ரயிலில் சென்ற பயணிகள் இடையே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வதில் மோதல் ஏற்பட்டதில், இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயில், விருந்துநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ரயிலில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்தனர். படிக்கட்டில் பயணம் செய்வதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த மோதலில் இருவரும் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் நாகர்கோவில் - கோவை ரயிலில் பயணம் செய்துள்ளார். அதே ரயிலில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஈரோடு செல்வதற்காக பயணம் செய்துள்ளார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி சண்டை போட்டுக்கொண்டதில், ரயிலின் படியில் இருந்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன சக பயணிகள் உடனே அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயிலில் இருந்து கீழே விழுந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தவறி விழுந்த மாரியப்பன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.
ரயில் சென்று கொண்டிருக்கும்போதே படிக்கட்டில் அமர்வது தொடர்பான சண்டையில் 2 பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சரக ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications