Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடம்பு மீது ஏறி உட்கார்ந்த, விருதுநகர் அரசு ஊழியர்.. தாலி கட்டின மனைவினு கூட யோசிக்கல.. கோர்ட் சபாஷ்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகரில் ஆவேசத்திலும், ஆத்திரத்திலும், கோபத்திலும் செய்த காரியம், வங்கி ஊழியரின் குடும்பத்தையே சிதறடித்துவிட்டது.. தாலி கட்டின மனைவி என்றும் பாராமல் கணவன் செய்த காரியத்துக்கு, இன்று நீதிமன்றம் சரியான தண்டனையை தந்துள்ளது.

கடந்த 2022-ல் இந்த சம்பவம் விருதுநகரில் நடந்தது.. என்ஜிஓ காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன்.. இவருக்கு அப்போது 32 வயது.. என்ஜினியரிங் பட்டதாரியான கண்ணன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசுடைமை வங்கியில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கற்பகத்துக்கு 30 வயது. இவர் கண்ணனின் சொந்த அத்தை மகள் ஆவார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது. நிகர்ஜித் (10), ஹரிஷ் கண்ணா (2) ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள்.

Virudhunagar Government Employee Verdict

வீசியது சந்தேகப்புயல்

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்வில், திடீரென விரிசல் ஏற்பட துவங்கியது.. கண்ணனின் மனதில் சந்தேக புயல் வீச துவங்கியதுமே, நிலைகுலைந்து போனது அந்த குடும்பம். தினம் தினம் தகராறு வாக்குவாதங்கள் வெடித்து வந்தன.. சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புகூட, தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கற்பகம் தன்னுடைய 2 மகன்களுடன், சிவகாசி மணிநகரில் உள்ள தன்னுடைய அண்ணன் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கெஞ்சி கதறிய கணவன்

ஆனால் கண்ணன், உடனடியாக ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று, "இனிமேல் பிரச்சினை செய்ய மாட்டேன்" என்று கற்பகத்தின் காலிலும், ஜெயக்குமாரின் காலிலும் விழுந்து கெஞ்சியுள்ளார். இதையடுத்து ஜெயக்குமார், தன்னுடைய தங்கை கற்பகத்தை சமாதானம் செய்து, கண்ணனுடன் விருதுநகருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

Virudhunagar Government Employee Verdict

அடுத்த 2வது நாள் காலை 6.45 மணியளவில், 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது, கற்பகம் கிச்சனில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. சமையலறைக்கு வந்த கண்ணன், அங்கிருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை குத்திவிட்டார். இதனால் வலியால் கற்பகம் அலறி துடித்துள்ளார்..

உடல் மீது ஏறி உட்கார்ந்த கணவர்

அந்த சத்தத்தை கேட்டு மூத்த மகன் நிகர்ஜித் கிச்சனுக்குள் ஓடியிருக்கிறார்.. அப்போது, கற்பகத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, அவரை கத்தியால் ஆவேசமாக குத்தியிருக்கிறார் கண்ணன். இதைப்பார்த்து மகன் அலறியிருக்கிறான்.. ஆனால் கண்ணனோ, மகன் நிகர்ஜித்தை வெளியே தள்ளி கதவைப்பூட்டி விட்டு சென்றுவிட்டாராம்.. இதற்கு பிறகு, நிகர்ஜித் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம், செல்போனை வாங்கி தன்னுடைய மாமா ஜெயக்குமாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து கதறி அழுதுள்ளான்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார், உடனடியாக உறவினருடன் ஓடிவந்து பார்த்தபோது, கற்பகம் சடலமாகி கிடந்தார்.. இதுபற்றி ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி இந்த கொலை நடந்து, விருதுநகரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

தீர்ப்பு தந்த நீதிமன்றம்

இந்த கொலை சம்பந்தமான வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தற்போது, கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்துள்ளார்.. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+