உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.1 கோடியாக உயர்வு!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.1 கோடியாகும். கொரோனாவால் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 12 கோடியாகும்.
உலகளவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் உலகளவில் இதுவரை 14.1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12 கோடியாகும். கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 30 லட்சமாகும்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.23 கோடியாகும். அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5.80 லட்சமாகும்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.47 கோடியாகும். கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1.77 லட்சமாகும். பிரேசிலில் இதுவரை 1.30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 3.71 லட்சமாகும்.
அது போல் பிரான்ஸில் 52 லட்சம் பேரும், ரஷ்யாவில் 46 லட்சம் பேரும், பிரிட்டடனில் 43 லட்சம் பேரும், துருக்கியில் 42 லட்சம் பேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தாலியில் 38 லட்சம் பேரும், ஸ்பெயினில் 34 லட்சம் பேரும், ஜெர்மனியில் 31 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.