உலகளவில் எகிறும் கொரோனா.. முழு லாக்டவுன்.. என்ன செய்யப் போகிறது இந்தியா?
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா காரணமாக 154,966,318 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியாவில் வைரஸ் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பல நாடுகளை சுழன்று அடித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதிகரிப்பதும், குறைவதுமாக வைரஸ் எண்ணிக்கை தொடர்ந்து வித்தை காட்டி வருகிறது.
அதேபோல், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,240,586 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் உயிரிழப்புகள் தொடருகின்றன. ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் தினசரி வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகம்.

அதிகரிக்கும் பாதிப்பு
உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 154,966,318 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 132,420,319 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 41,735 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகமாகும். அதுமட்டுமின்றி, அங்கு ஒரேநாளில் 842 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் அதிகம்
அதேபோல், பிரேசிலில் ஒரே நாளில் 69,378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,025 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், இங்கிலாந்தில் 1,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் 24,371 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு ஒரேநாளில் 247 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

பலி எண்ணிக்கை
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 337 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இத்தாலியில் 9,116 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 305 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தொடரும் பேச்சுவார்த்தை
இந்த சூழலில், கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு பதில் மாற்று நன்கொடையாளர்களை தேடி வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது,. அடுத்த சில மாதங்களுக்கு இந்தியாவால் கொரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சர்வதேச சுகாதார நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா மற்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் எப்போது வழங்கும் என்ற தேதி உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒராண்டில் சர்வதேச அளவில் பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு 3 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று சர்வதேச சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் தொடர்ந்து நிலவும் வைரஸ் பரவல் காரணமாக முழு லாக் டவுன் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்திருக்கிறது.
-
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம் -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்!












Click it and Unblock the Notifications