அமெரிக்கா அதிபர் தேர்தலில் புதிய சரித்திரம்... 2.2 கோடி பேர் வாக்களித்தனர்!
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் மாகாணங்களில் இதுவரை 2.2 கோடி பேர் வாக்களித்து புதிய சரித்திரம் படைத்திருக்கின்றனர்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அதிபரை தேர்ந்தெடுக்கும் மாகாணங்களில் வாக்காளர் குழு அல்லது மாகாணங்களின் தேர்தல் சபைக்கான தேர்தல் நடைபெறும்.

மாகாண குழு ஆதரவு
இந்த குழுவினர்தான் அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்த வாக்காளர் குழு அல்லது மாகாணங்களின் தேர்தல் சபை மொத்த எண்ணிக்கை 538. இதில் 270 குழுக்களின் ஆதரவு இருந்தால்தான் அதிபர் ஆக முடியும்.

அதிபரை தீர்மானிப்பவர்கள்
மாகாணங்களில் அதிபர் வேட்பாளருக்கு வாக்குகள் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் தீர்மானிக்கும் சக்திகள் இவர்கள்தான். கடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப்க்கு மாகாணங்களில் வாக்குகள் குறைவாக இருந்த போதும் இந்த குழுக்களின் பெரும்பான்மை இருந்ததால் அதிபரானார்.

வாக்களிப்பு தீவிரம்
இப்போது 50 மாகாணங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேரடி மற்றும் தபால் வாக்களிப்பு இரண்டும் இத்தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இதில் இதுவரை மொத்தம் 2.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த அதிபர் தேர்தலை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும். கொரோனா பரவல் இருக்கும் காலத்திலும் அதிக அளவில் வாக்களித்திருக்கின்றனர்.

அதிக வாக்களிப்பு?
தற்போதைய நிலையில் அமெரிக்காவில் சுமார் 15 கோடி பேர் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 1908-ம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் தேர்தலில் முதல் முறையாக மிக அதிக அளவில் வாக்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications