வீடுகள் குலுங்கின.. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளில் உள்ள பொருட்களும் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கா - மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள சான் டியோகா பகுதி முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுகத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

வீடுகளில் உள்ள பொருட்களும் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார்கள் நிலடுக்கத்தால் குலுங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. எனினும் நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
நில நடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று அமெரிக்காவின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தீ அணைப்புத்துறையும் உறுதி செய்துள்ளது. சமீப காலமாக கலிபோர்னியா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களில் மட்டும் 4 முதல் 5 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் அதிர்ந்த வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் கடந்த வாரம் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது 4.4 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications