துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசர நிலை.. உத்தரவை வெளியிட்டு காரணத்தையும் சொன்ன அதிபர் எர்டோகன்
துருக்கியில் 10 மாகாணங்களில் அடுத்த 3 மாதங்களுக்கு அவசர நிலை அமலில் இருக்கும் என்று அந்த நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்: நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் அடுத்த 3 மாதங்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அந்த நாட்டின் அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். அவசர நிலை பிறப்பித்தது எதற்காக என்ற காரணத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானபதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

கட்டிடங்கள் தரைமட்டமாகின
துருக்கியில் ஒரு வார கால தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்துள்ளார். இங்கு பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற 10 மாகாணங்களிலும் பல கட்டிடங்கள் தரைமட்டமாக காட்சி அளிக்கின்றன. தங்கள் நேசத்திற்குரியவர்களை பறிகொடுத்த துக்கத்தில் பலரும் இருப்பதை எங்கு பார்த்தாலும் காண முடிகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உலக நாடுகள் பலவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

மீட்பு பணிகளில் தொய்வு
துருக்கிக்கு 65 நாடுகளில் இருந்து 2,660 பேர் மீட்பு, நிவாரண பணிகளுக்காக விரைவதாக துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரகால அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கியில் மட்டுமே சுமார் 25 ஆயிரம் எமெர்ஜன்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் பல இடங்களில் மீட்பு, நிவாரண பணி குழுவினர் வரவில்லை என்ற தகவலும் வருகிறது. அடிக்கடி ஏற்படும் பின் அதிர்வுகளாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அவசர நிலையை அறிவித்த எர்டோகன்
துருக்கியில் நில நடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் மக்கள் விளையாட்டு மையங்களிலும், கண்காட்சி அரங்குகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். பல இடங்களில் இரவெல்லாம் மக்கள் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். காசியான்டெப் நகரத்தில் மக்கள் வணிக வளாகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், சமுதாய மையங்களிலும் அடைக்கலம் புகுந்தனர். இந்த நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்த 10 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் எர்டோகன் அவசர நிலை பிரகடனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த 3 மாதங்களுக்கு அமல்
துருக்கி நாட்டு சட்டப்பிரிவு 119-ன் கீழ் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ள எர்டோகன் அதிபர் அலுவலகத்தின் முடிவுளை விரைந்து எடுக்கவும் அதை செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் இந்த அவசர நிலையை பிறப்பித்து இருப்பதாக தெரிவித்தார். தேடுதல் மீட்பு பணிகளில் உதவ 70 நாடுகள் முன்வந்து இருப்பதாகவும் எர்டோகன் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications