பாலியல் உறவு.. 13 வயது சிறுவனையே தந்தையாக்கிய 31 வயது பெண்.. இப்போது சிக்கலில் தவிப்பு.. என்னாச்சு?
31 வயது நிரம்பிய பெண் 13 வயது சிறுவனுடன் நட்பாக பழகி பாலியல் உறவு வைத்து கொண்டு குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 13 வயது சிறுவனுடன் நட்பாக பழகி கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்து கொண்ட 31 வயது பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பான பாலியல் புகாரில் ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்ட நிலையில் விரைவில் தண்டனை வழங்கப்படலாம் எனும் நிலையில் அதில் இருந்து தப்பிக்க அந்த பெண் மெகா பிளான் போட்டுள்ளார். இது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய கலாசாரம் கொண்ட நாடுகளில் அவ்வப்போது வித்தியாசமான பாலியல் புகார்கள் கூறப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தான் தற்போது அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் என்ன?, எப்போது நடந்தது? என்பது பற்றிய முழுவிபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சிறுவனுடன் பாலியல் உறவு
அமெரிக்காவின் கொலராடோவை சேர்ந்தவர் 31 வயது பெண் ஆன்ட்ரியா செரோனோ. இவர் 13 வயது சிறுவனுடன் நட்பாக பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே வேறு விதமான உறவாக மாறியுள்ளது. அதாவது ஆன்ட்ரியோ செரோனோ, சிறுவனுடன் உறவு வைத்துள்ளார். சிறுவனிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர் தொடர்ந்து உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கர்ப்பமான பெண்
மேலும் சிறுவனுக்கு தேவையானவற்றை ஆன்ட்ரியோ செரோனா செய்து கொடுத்துள்ளார். இதனால் சிறுவனும் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையே தான் ஆன்ட்ரியோ செரோனா கர்ப்பமாகி உள்ளார். அப்போது தான் சிறுவனுக்கும், ஆன்ட்ரியோ செரோனாவுக்கும் இடையேயான உறவு பற்றிய விஷயம் வெளியே தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பெண்
இதையடுத்து சிறுவன் தரப்பினர் கொடுத்த புகாரில் அமெரிக்காவின் புவுண்டைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்டரியா செரோனாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே ஆன்ட்ரியோ செரோனாவுக்கு குழந்தை ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தற்போது ஆன்டரியோ செரோனா குழந்தையுடன் உள்ளார்.

தண்டனையில் தப்பிக்க புதுரூட்
இந்நிலையில் தான் சிறை தண்டனையில் இருந்த தப்பிக்க ஆன்ட்ரியோ செரோனா திட்டமிட்டு வருகிறார். அதன்படி குழந்தையை காரணம் காட்டி தப்பிக்க அவர் முடிவு செய்துள்ளார். தற்போதைய குற்றச்சாட்டில் தண்டனை கிடைத்தால் 10 ஆண்டுகள் வரை அவர் சிறையில் இருக்க வேண்டி இருக்கும் என்பதால் அவரது வழக்கறிஞர்கள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். இதற்காக புதிய மனு செய்துள்ளார். அதில் ஆன்ட்ரியோ செரோனா என்பவர் சிறுவனுடன் உறவு வைத்த குற்றவாளி என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் புதிய குழந்தையின் நலன் கருதி தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக சிறுவன் தரப்பிடம் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவனின் தாய் எதிர்ப்பு
இதற்கு சிறுவனின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛எனது மகனை ஏமாற்றி கற்பை சூறையாடி உள்ளனர். இப்போது அவனுக்கு வயது 14 தான் ஆகிறது. இந்த வழக்கில் பெண் விடுவிக்கப்பட்டால் அந்த குழந்தைக்கு எனது மகன் தந்தை என்ற பிம்பம் உருவாக்கப்படும். இது வாழ்நாள் முழுவதும் அவனுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். பெண் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். ஒருவேளை இந்த வழக்கில் மைனர் பெண்ணை 31 வயது ஆண் பலாத்காரம் செய்திருந்தால் தண்டனை என்பது கடுமையாக இருந்திருக்கும். அதேபாணியில் இந்த பெண்ணுக்கும் தண்டனை வழங்க வேண்டும்'' என கூறியுள்ளார். இந்நிலையில் தான் அந்த பெண்ணின் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications