44 ஆண்டுகளாக அதிபர்.. உலகிலேயே அதிக வருடம் அதிகாரத்தில் இருந்த தலைவர்கள்.. லிஸ்டில் இவருமா?
வாஷிங்டன்: உலக நாடுகளில் அதிக ஆண்டு ஆட்சியில் இருக்கும் முதல் 10 தலைவர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். புதினின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் 2024 மார்ச் 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபராக தொடர்ந்து 4 முறை பதவி வகித்துள்ள புதின், 5-வது முறையாகவும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ரஷ்யாவை பொறுத்தவரை அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் தான்.

ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவியில் இருக்க முடியாது. ஆனால், புதினோ தனது பதவியை நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்ததை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 2036 ஆம் ஆண்டு வரை அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியும். ரஷ்யாவின் சர்வ வல்லமை படைத்த தலைவராகவும் உலக அரங்கில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும் புதின் நீடித்து வருகிறார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் புதினுக்கு கடுமையான எதிர்ப்புகள் ஒருபக்கம் இருந்தாலும் தொடர்ந்து ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க தலைவராகவே இருந்து வருகிறார் புதின். சரி அதெல்லாம் இருக்கட்டும். சர்வதேச அளவில் இதுவரை நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த தலைவர்கள் குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
முதல் இடத்தில் ஒபியாங்: * மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடோரியல் கினியாவில் கடந்த 1979 ஆம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை செய்து அதிகாரத்தை பிடித்தவர் ஒபியாங். இவர் 44 ஆண்டுகள் தொடர்ந்து அந்த நாட்டில் அதிபராக இருந்தார். உலக அளவில் நீண்ட காலம் இந்த பொறுப்பில் இருந்த தலைவர் ஒபியாங் தான். அவரது ஆட்சியின் கீழ் ஆப்பிரிக்காவின் வடகொரியா என்று ஈக்வடோரியல் கினியா அறியப்பட்டது
* இந்தப் பட்டியலில் 2-வது இடம் வகிப்பது கேமுரூன் நாட்டை சேர்ந்த பியா. மேற்கு ஆப்பிரிக்க நாடான பியாவில் கடந்த 1982 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் அதிபரக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 41 ஆண்டுகளாக அவர் பதவியில் இருந்து வருகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட வயதான உலக தலைவராகவும் (90) இவர் உள்ளார்.
உகாண்டா அதிபர்: * காங்கோ நாட்டின் பிராஸ்ஸாவில்லியின் சஸ்சோ நுஸ்ஸோ 39 வருடமாக அந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார். 1979- ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர். பின்னர் 1997- ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்த நுஸ்ஸோ தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருகிறார்.
* உகாண்டா நாட்டின் அதிபர் யோவேரி முசேவேனி (வயது 79) 37 ஆண்டுகளாக அதிபர் பொறுப்பில் இருந்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 6-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
* தஜிகிஸ்தானி, ரஹ்மோன் 31 ஆண்டுகளாக அதிபர் பொறுப்பில் இருந்து வருகிறார். அதேபோல், எரித்திரியாவின் அஃப்வெர்கி 30 வருடங்களாக அதிபர் பதவியில் நீடித்து வருகிறார்.
அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ: * பெலாரஸ் நாட்டின் அதிபராக 29 ஆண்டுகளாக அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ நீடித்து வருகிறார். புதினின் நெருங்கிய கூட்டாளியாகவும் இவர் அறியப்படுகிறார்.
* ஜிபூட்டி நாட்டின் அதிபராக உமர் குயெல்லே (வயது 79) பதவி வகித்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் 5 முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 24 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்.
* இந்த வரிசையில் 9-வது இடத்தை ரஷ்ய அதிபர் புதின் பிடித்துள்ளார். 71 வயதான புதின் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக ரஷ்யாவின் அதிகாரம் மிக்க உச்சபட்ச பொறுப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
* இந்த பட்டியலில் ருவாண்டா நாட்டின் அதிபர் பவுல் காகமே உள்ளார். மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடான ருவண்டாவில் 2000 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications