பூமியின் சுற்று வட்டப்பாதையின் மீது மோதும் சிறுகோள்... எப்போது... ஆபத்தா?
நாசா: போயிங் 747 ஜெட் விமானத்தை விட அளவில் பெரியதாக இருக்கும் சிறுகோள் ஒன்று பூமியின் சுற்று வட்டப்பாதையில் நாளை மோத இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2020 RK2 எனப்படும் இந்த சிறுகோளை கடந்த சில வாரங்களாகவே கண்காணித்து வருவதாக நாசா குறிப்பிட்டுள்ளது.
நாசாவில் இருக்கும் விஞ்ஞானிகள் இந்த சிறுகோளை கடந்த மாதம் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிறுகோள் அப்போலோ சிறுகோள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையிலான சிறுகோள்கள் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.

பூமியின் சுற்று வட்டப்பாதையை இந்த சிறுகோள் ஒரு விநாடிக்கு 6.68 கி. மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும். இந்த வேகம் மனிதர்களுக்கு அதிவேகமாக இருக்கலாம். ஆனால், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நகர்ந்து செல்வதால் இது வேகமாக கருதப்படாது.
2020 RK2 என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சிறுகோள் 36 மீட்டர் முதல் 81 மீட்டர் வரையிலான விட்டம் கொண்டது. அதாவது 118 முதல் 256 அடி நீளமானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோளை பூமியில் இருந்து பார்க்க முடியாது. நாளை மாலை (அக்டோபர் 7ஆம் தேதி) பிரிட்டன் நேரப்படி 6.12 மணிக்கு பூமியின் சுற்று வட்டப்பாதையை கடந்து செல்லும்.
பூமியில் இருந்து 38,27,797.34 கி. மீட்டர் தொலைவில் இந்த சிறுகோள் கடந்து செல்வதால் பயப்பட வேண்டியதில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.
இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பல டஜன் கணக்கில் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு சிறுகோள்கள் வருகின்றன. ஆனால், இவற்றில் பல பூமியின் சுற்று வட்டப்பாதையின் மீது மோதுவதில்லை. 2020 RK2 என்ற கோளை விட சிறியதாக பெரும்பாலான கோள்கள் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த 2020 RK2 என்ற சிறுகோள் மீண்டும் 2027 ஆம் ஆண்டு வரை பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications