மியான்மர் நாட்டின் மீது பொருளாதார தடை... அமெரிக்க அதிபர் பைடன் அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன்: மியான்மர் நாட்டில் ராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அதோடு, மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சான் சூகி, அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
மியான்மரில் கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் முறையாக நடைபெற்றவுடன் ஆட்சி திருப்பியளிக்கப்படும் என்றும் ராணுவம் தெரிவித்திருந்தது.

மக்கள் போராட்டம்
மியான்மரில் நடைபெற்ற இந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த மியான்மர் ராணுவம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க அந்நாட்டில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

பொருளாதார தடை
மியான்மரில் நடைபெற்று வரும் ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், மியான்மர் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவுள்ளதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பிற்கு வித்திட்ட தலைவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மியான்மர் அரசுக்கு அமெரிக்கா 1 பில்லியன் டாலர் நிதி அளித்திருந்தது. இதை அந்நாட்டு ராணுவ தலைவர்கள் பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சொத்துகள் முடக்கம்
இந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு யார் காரணமான முக்கிய நபர்கள் இந்த வாரம் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், மியான்மர் நாட்டின மீது வலுவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் விதிக்கவுள்ளதாகவும் அந்நாட்டிற்குப் பயனளிக்கும் அமெரிக்கச் சொத்துக்களை முடக்குவதாகவும் அவர் அறிவித்தார். அதேநேரம் மியான்மர் மக்கள் நேரடியாகப் பலன் பெரும் சுகாதார மற்றும் சமூக குழுக்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தலைவர்களை விடுவிக்க வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக மியான்மர் மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். தங்கள் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்கின்றர். மியான்மரில் நடைபெறும் வரும் நிகழ்வுகளை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் முறைகேடாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications