Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சதிகார சீனா.. இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை குறிவைத்து AI-யால் செய்த வேலை.. அமெரிக்கா பகீர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தான் சீனாவின் வான்வெளி பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திய நிலையில் அதனை தாண்டி நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தான் பதம் பார்த்தன. இதனால் ஷாக்கான சீனா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ஏஐ உதவியுடன் ரஃபேல் போர் விமானங்களை அழித்ததாக போலியான போட்டோக்களை போலி வலைதளங்கள் மூலம் பரப்பி தனது மார்க்கெட் மதிப்பை உயர்த்த திட்டமிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரபேல் போர் விமானங்களை குறிவைத்து சீனா செய்த சதி என அமெரிக்கா சொன்ன தகவல் பின்வருமாறு:

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கடந்த மே மாதம் 7 ம்தேதி தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் நாட்டின் ஏவுகணைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை நம் நாட்டின் படைகள் அழித்தன.

US china india operation sindoor

பதிலடி கொடுக்க முயன்ற பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்கள், ஏவுகணைகள் வானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன. மே 10ம் தேதி வரை இந்த மோதல் நடந்த பிறகு பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. எங்களை தாக்காதீங்க என்று கூறி சரணடைந்தது. இதையடுத்து நம் நாடும் தாக்குதலை நிறுத்தியது.

இந்த ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் சீனா உதவி செய்தன. சீனா ராணுவ விமானங்கள், வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தானுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. அதேபோல் துருக்கி, பாகிஸ்தானின் நெருகங்கிய நட்பு நாடாகும். இதனால் இருநாடுகளும் உதவி செய்தன. குறிப்பாக நம் நாட்டின் அனுப்ப்படும் ஏவுகணைகளின் திசையை கண்காணித்து சீனா பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது.

இருப்பினும் கூட நம் நாட்டு படை வீரர்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை பந்தாடின. அதுமட்டுமின்றி சீனாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்தன. இது சீனாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஏற்கனவே சீனாவின் பாதுகாப்பு உபகரணங்கள் உலகளவில் நல்ல மதிப்பை பெறவில்லை. பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில் அதனையும் நம் நாடு அழித்தது சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்படியான சூழலில் தான் சீனா நம் நாட்டுக்கு எதிராக போலியான செய்திகளை பரப்பி தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயன்றதாக அமெரிக்கா திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் பற்றி தவறான செய்திகளை பரப்ப சீனா திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாம். இதனை அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் அமெரிக்கா - சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மறுஆய்வு ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ‛‛சீனா ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உலகளாவிய பாதுகாப்பு அம்சங்களுக்கு பங்கம் விளைவிக்க நினைக்கிறது. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு சீனா ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட போலி போட்டோக்களை பரப்பும் வகையில் சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக சீனாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளால் இந்தியா பயன்படுத்தும் பிரான்ஸிடம் இருந்து வாங்கும் ரபேல் போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிதைந்த பாகங்களை போலியாக ஏஐ மூலமாக உருவாக்கி போலி வலைதளங்கள் வழியாக பரப்பி உள்ளது. இதன்மூலம் சீனா பாதுகாப்பு துறை சார்ந்த சந்தையை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதோடு பிரான்ஸின் ரபேல் போர் விமானங்களின் மீதான உலகளாவிய பார்வையை குறைமதிப்புக்கு உட்படுத்தவும் சீனா முயற்சித்துள்ளது. ரபேல் போர் விமானங்கள் போருக்கு உகந்தது இல்லை என்பதை பரப்பவும், ரபேலுக்கு பதில் சீனா தனது ஜே -35ரக போர் விமானங்களை விளம்பரப்படுத்தி அதன் விற்பனையை சீனா அதிகரிக்க திட்டமிட்டு இந்த சதியை முன்னெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு தற்போது அதிககவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே இருந்த பகை தற்போது படிப்படியாக மறைந்து வருகிறது. சமீபத்தில் தான் பிரதமர் மோடி 5 ஆண்டுகள் கழித்து சீனாவுக்கு சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது பற்றி விவாதித்தார். அதன்பிறகு இருநாடுகள் இடையே நிறுத்தி வைக்கப்பட்ட நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்கா, இப்படி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+