தூதரகம் மூடல்.. அடுத்து சீன நிறுவனங்களுக்கு பங்குச் சந்தையில் நெருக்கடி.. ட்ரம்ப்பின் புதிய அஸ்திரம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகளில் இடம் பெற்று இருக்கும் சீனா நிறுவனங்கள் குறித்த தகவல்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கணக்கெடுக்க துவங்கியுள்ளது. அமெரிக்காவின் தணிக்கை நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது விரைவில் ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா உறுதியாக நம்பி வருகிறது. தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்கவில்லை. கொரோனா பரவுவதற்கு முன்பிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. மீண்டும் சீனாவுடன் வர்த்தகம் வைத்துக் கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளோம் என்று சமீபத்தில் ட்ரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சீனாவின் டிக் டாக் ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார். வரும் செப்டம்பர் 15க்குள் டிக் டாக் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தற்போது கெடு விதித்துள்ளார்.
இந்த நிலையில்தான் இன்று அமெரிக்காவின் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகளில் இடம் பெற்று இருக்கும் சீன நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் தணிக்கை நெறிமுறைகளை பின்பற்றாத சீன நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றை பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்குவது என்று ட்ரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.
நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகளில் முறையாக நடந்து கொள்ளாத சீன நிறுவனங்களை பொது நிறுவன கணக்கியல் மேற்பார்வை வாரியத்தில் இருந்து நீக்குவது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களாக அறிவித்துக் கொள்ளாமல், பங்குகளை விற்று வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக்கில் தங்களை முறையாக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் போன்ற விதிகளை சீன நிறுவனங்கள் மீறி இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் அமெரிக்கா புதிய சட்டங்களை கொண்டு வந்தது. அதன்படி பதிவு செய்து கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் நீக்கப்படும்.
சீனா மீது தொடர்ந்து அமெரிக்கா கோபத்தில் இருக்கிறது. சமீபத்தில் ஹூஸ்டனில் இருக்கும் சீன தூதரகத்தை மூடுமாறு வாஷிங்டன் உத்தரவு பிறப்பித்தது. ஹூஸ்டன் தூதரகம் ஒற்றர்களின் கூடாரமாக இருக்கிறது என்று அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது.
''சீனா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சுதந்திரம் விரும்பும் மக்களுக்கு எதிரானதாக சீனா நடந்து கொள்கிறது. சீனா தொடர்ந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இது மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது'' என்று அமெரிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்!












Click it and Unblock the Notifications