இஸ்ரேலுக்கு எதிராக எப்படி செயல்படலாம்? சர்வதேச நீதிமன்றத்துக்கே தடை போட்ட டிரம்ப்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவதாகவும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றம் என்பது உலகில் நடக்கும் போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது.

இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் என்பது அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அதாவது இந்த நீதிமன்றம் ஒரு சில நாடுகளுக்கு ஆதரவாகவும், பிற நாடுகளுக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழலில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் காசா மீதான போர் நடவடிக்கையால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கு இருநாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவர்கள் 2 பேரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு செல்லும்போது கைது செய்யப்படும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைகளை விதிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இது சட்டவிரோதமானது. அதோடு அடிப்படை ஆதாரமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்கிறது என்று கூறி இந்த தடை உத்தரவை டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
இந்த தடை உத்தரவின்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான நிதி மற்றும் விசா விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும்.
டொனால்ட் டிரம்பின் இந்த உத்தரவின் பின்னணியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளார். அதாவது இஸ்ரேல் கடந்த 15 மாதமாக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக காசாவில் போர் புரிந்து வந்தது. கடந்த மாதம் இந்த போர் என்பது ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதரிா சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
காசாவில் இனப்படுகொலை செய்வதாக பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டது. இதனை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது. அதேபோல் ஹமாஸ் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான யாக்யா சின்வாருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் யாக்யா சின்வாரை இஸ்ரேல் படையினர் கொன்றுவிட்டனர்.
இந்த விவகாரத்தில் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்த நாாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது அமெரிக்கா தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜோ பைடன் அரசு எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் டொனால்ட் டிரம்ப் சர்வதேச நீதிமன்றத்துக்கே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு என்பது கடந்த 4ம் தேதி அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பை, பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு வெளியாகி உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது டொனால்ட் டிரம்ப் இப்படி தடைகளை விதிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு அதாவது டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்தபோதும் தடைகளை விதித்துள்ளார். அப்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து அப்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது தடையை விதித்தார். அதன்பிறகு ஜோ பைடன் அதிபரானதும் அந்த தடைகள் நீக்கப்பட்டன. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் டொனால்ட் டிரம்ப் சர்வதேச நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்துள்ளார்.
தற்போது இந்த சர்வதேச நீதிமன்றத்தை 125 நாடுகள் அங்கீகரித்து உறுப்பினர்களாக உள்ளன. வரும் காலத்தில் 34 நாடுகள் இந்த நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக சேர உள்ளனர். ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்டவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications