ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்.. 'முருங்கை மரம்' ஏறும் டிரம்ப்.. டென்ஷனில் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பிடன் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்கப் போகும் விழாவில், தான், பங்கேற்க போவது கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிட்டனர். ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இந்த வெற்றியை ஏற்க டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார்.
ஜோ பிடன் வெற்றிக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் தரப்பு பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இருப்பினும் தேர்தல் வெற்றி சான்றிதழை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் பரிசீலனை செய்யும் போது திடீரென ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அங்கு பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

வன்முறை
பல மணி நேரத்துக்கு பிறகு காவல்துறை இந்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. உலகநாடுகள் முழுக்க இந்த விவகாரத்தால் அதிர்ச்சியடைந்து போயின. இப்படியான சூழ்நிலையில் ஜோ பிடன் வெற்றியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்து விட்டனர். எனவே ஜனவரி 20ஆம் தேதி திட்டமிட்டபடியே ஜோ பிடன், அதிபராகவும், துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர்.

டிரம்ப் அறிவிப்பு
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 20ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்க போவது கிடையாது என்று தெரிவித்துள்ளார். பலரும் இது பற்றி தன்னிடம் கேட்டதாகவும், அதற்கான பதில் இது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மக்களிடம் சந்தேகம்
முன்னதாக டிரம்ப் வெளியிட்ட வீடியோ பதிவில் ஜனவரி 20ஆம் தேதி புதிய நிர்வாகம் பொறுப்பேற்க உள்ளது. அமைதியான, சுமூகமான அதிகார பரிமாற்றம் எனது நோக்கம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் மறுபடியும் ஏதேனும் பிரச்சினை செய்வார்களா என்று மக்களில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

வரலாற்றில் முன்பு
இதற்கு முன்பாக, 1869ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆண்ட்ரூ ஜான்சன் பதவி வகித்தபோது அடுத்ததாக பதவியேற்கவிருந்த யுலிசஸ் எஸ்.கிராண்ட்டின் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்காமல் தவிர்த்தார். ஆண்ட்ரூ ஜான்சனுக்கு பிறகு இவ்வாறு ஒருவ அதிபர், புதிய அதிபர் பதவியேற்பு விழாவை தவிர்க்கப் போவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications